புனித ஜகன்நாதர் ரத யாத்திரை!! சமையலறை வரை சென்ற கௌதம் அதானி!! 

Holy Lord Jagannath Rath Yatra
புவனேஸ்வர்: புனித ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது அதானி  குடும்பத்தை சேர்ந்த தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். மேலும் கௌதம் அதானி இஸ்கான்  மெகா சமையலறைக்கு வருகை தந்து தன்னார்வலர்களுடன் சேர்ந்து சேவை செய்தார். கௌதம் அதானி அவரது மனைவி டாக்டர் ப்ரீத்தி அதானி மற்றும் அவரது மகன் கரண் அதானி ஆகியோர் சேவையில் ஈடுபட்டனர்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித சைவ உணவு பிரசாதத்தை பெற்றனர். இந்த ஆண்டு கும்பமேளாவில் செய்ததை போன்ற முன்னெடுத்து கூட்டு செய்துள்ளனர். ஆன்மீகம் மற்றும் கலாச்சார சேவை மரபுகளை இந்தியாவின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்பது குறிக்கோளாக கருதப்பட்டது.
சமையலறைக்கு சென்ற கௌதம் அதானி சமையலறை பணிகளில் தன்னார்வலர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார். பாதுகாப்பு குழுவினர் முதலில் தயக்கம் காட்டியுள்ளன. உழைக்கும் சமையலறை குழுவினருக்கு உற்சாகம் தரும் வகையில் சிறிது நேரம் பூரி கூட்டு, சப்ஜி செய்தார். பெரிய சமையல் பாத்திரத்தை ப்ரீத்தி அதானி தூக்க முயன்ற போது தூக்க முடியாமல் இருந்துள்ளார். என் மகன் கருண தானே அவருக்கு உதவி செய்தார்.
பிரதிநிதி கூறுகையில் அதானி குடும்பத்தினர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து சேவையில் ஈடுபட்டதை உண்மையாகவே நாம் பாராட்டியே ஆக வேண்டும் என நினைக்கிறேன். அதானி குடும்பத்தின் இந்த செயல் கலாச்சாரம் மற்றும் பக்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என நினைக்கிறேன்.
சமையலறைக்கு வந்து மட்டுமல்ல அங்குள்ள வேலைகளை பார்த்துக் கொண்டு உற்சாகத்துடன் செயல்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஒடிசா மாநிலத்தில் நடக்கும் பூரி ரத யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து போவது வழக்கம். தன்னலமற்ற தொழிலதிபர்கள்  ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தை ஆதரிக்கவும் வேண்டும் என கூறியுள்ளார் இஸ்கான் நிர்வாகிகள்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram