தேர்தல் வருவதை ஒட்டி, தேர்தல் களப்பணிகள் அனைத்து கட்சிகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு ஆட்சியின் மகளிர் உரிமை தொகை திட்டமானது விரிவடைய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஜூன் நான்காம் தேதி முதலே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. ஆனால் அரசு கூறப்பட்டது போல் முகாம்கள் ஆங்காங்கே விரிவடையவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இ சேவை மையங்களும் இதைப்பற்றி தகவல் தெரியவில்லை என்று கூறுவதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் இதற்காக அப்ளை செய்ய அருகில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவும் போதிய அளவில் கிடைப்பதில்லை என்று மக்களின் தரப்பில் சொல்லப்படுகின்றது. எனவே அரசு கூடிய விரைவில் இதற்கென்று பிரத்தியேக முகாம்கள் விரிவடையப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஒரு வீட்டில் இரு பெண்கள் இருப்பின், வீட்டின் குடும்பத் தலைவி என்று ரேஷன் கார்டில் உள்ளவர்கள் இதற்கு அப்ளை செய்யலாம். ஆனால் அந்த குடும்ப தலைவி அரசு சார்பில் இருந்து, எந்த ஒரு பென்ஷனும் வாங்க கூடாது. குடும்ப தலைவர் அரசு வேலையில் இருக்கக்கூடாது. அம்மா இல்லாத குடும்பமாக இருப்பின் அந்த வீட்டு மகளுக்கு 21 வயது பூர்த்தி அடைந்த நிலையில் அவரும் இதற்கு தகுதி வாய்ந்தவரே! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





