இஸ்லாமாபாத் : இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை நம் நாட்டிடம் சரணடைய வைத்தது. பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இத்தாலி மற்றும் ஜெர்மனியின் உதவி கேட்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக ஜெர்மனியின் என்ற வான்வழி பாதுகாப்பு சிஸ்டமே வாங்குவதற்கான ஆர்வத்தில் இறங்கி உள்ளது பாகிஸ்தான்.
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பஹல்காமில் பாகிஸ்தானின் “தி ரெசிஸ்டண்ட் ஃப்ரெண்ட் ” என்று அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேரை கொன்றனர். இந்தியா பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த மாதம் 7 ம் தேதி அன்று நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலின் போது 9 பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்குப் பிறகு விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ தளங்கள் என மொத்தம் 12 இடங்களை இந்தியா அழித்துள்ளது. ரஷ்யா மற்றும் இந்தியா இணைந்து தயாரித்த ஏவுகணை பிரமோஸ். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் கதிகலங்கி மண்டியிட்டது. தாக்குதலின் போது சீனாவிடமிருந்து வாங்கிய HQ-9B மற்றும் HQ-16 போன்ற வான்வெளி பாதுகாப்பு சிஸ்டங்களை அழித்தது பிரமோஸ்.
எதிர்காலத்தில் பிரமோஸ் ஏவுகணையை தடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் இரு நாடுகளிடம் உதவி கேட்க உள்ளது.இத்தாலி மற்றும் ஜெர்மனியின் பாதுகாப்பு சிஸ்டங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஜெர்மனியிடம் இருந்து IRIS-T மற்றும் இத்தாலியிடம் இருந்து CAMM-ER போன்ற வான்வெளி பாதுகாப்பு சிஸ்டங்களில் ஒன்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.
IRIS-T பாதுகாப்பு சிஸ்டமானது 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கண்டுபிடிக்கும். மேலும், 20 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வரும் ட்ரோன்களையும் தாக்கும் திறன் கொண்டது. ஜெர்மனி தனது வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமே வழங்குமா? என்பது கேள்வியாக உள்ளது. .