கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் டேனியல் ஆரோக்கியம் என்பவர் விசைப்படகுகளுடன் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 8 மீனவர்கள் மற்றும் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை மற்றும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் களின் மீன் பிடித்து வருவது வழக்கம். இதைத்தொடர்ந்து மீன் பிடிக்கும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர்.
அடிக்கடி இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை சிறை பிடித்து வருகின்றனர் இது அரசியல் கட்சிகள் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசிடம் கண்டிக்கத்தக்க செயலாக இருந்து வருகிறது. மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகள் சார்பில் மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
நேற்று, முன்தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த எட்டு மீனவர்கள் கடலுக்குள் எல்லை மீறி மீன் பிடித்ததாக கூறி இலங்கைப் படையினர் கைது செய்தனர். 8 மீனவர்கள் மற்றும் அவர்களது விசை படகுகளையும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது மீண்டும் 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று மீன் பிடிப்பதற்காக ராமேஸ்வரத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் ஏழு பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை மற்றும் அவர்களது விசைப்படகுகளை சிறை பிடித்து சென்றுள்ளனர். மேலும், தலைமன்னார் கடை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.