ரஷ்யாவில் விமான சேவை பாதிப்பு.. உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்!!

Russia is serious about retaliating against Ukraine!!

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போர் சமீப காலமாக நடந்து  வருகிறது. இந்நிலையில் உக்கரைனின் திடீர்  ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ரஷ்யாவின் மாஸ்கோவில் விமான சேவை மட்டுமல்லாது இதர சேவைகளும்  கடுமையாக பாதித்துள்ளது. உக்ரைன் தொடர்ந்து டோன்ட் தாக்குதலை நடத்தி வருவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்கிரனுக்கு இடையேயான போரை நிறுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்து முயற்சி எடுத்த நிலையில் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. சில நாட்களுக்கு முன் உக்கிரன், ரஷ்யா விமானப்படை தளம் மீது திடீரென்று ட்ரோன்  தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 ரஷ்ய போர் விமானங்கள் தகர்க்கப்பட்டது.

ரஷ்யா உக்ரைன் போல துவக்த்திலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லையே இந்த ட்ரோன் தாக்குதல் தான் மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் மீது 400 ட்ரோன்கள் மற்றும்  40 ஏவுகணைகள் ஆகியவை கொண்டு திடீரென  தாக்குதல் நடத்தியது ரஷ்யா.

தற்போது உக்ரைன் தொடர்ந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியதால்  ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாஸ்கோ விமான நிலையங்களின் பாதிப்பால். விமானங்கள் நிறுத்தியுள்ளது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்ய தரப்பில் 2 மணி நேரத்தில் உக்ரைனின் 76 ட்ரோன்கள் கொண்டு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையமான ரோசாவியாட்சியா விமானங்களை பாதுகாப்பு உறுதி செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யா பெயர் மகள் ஆலோசித்து வருகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram