ஈரானிலிருந்த 110 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்பு!! ஆப்ரேஷன் சிந்து!!

110 Indian students rescued safely!!

யெரெவான்: ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலையில் தாக்குதலின் போது 5 இந்திய மாணவர்கள் படுகாயமடைந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே ஈரான் இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகிறது. நகரங்களின் முக்கிய இடங்கள் மற்றும் ராணுவ தளங்கள், குறிப்பாக எண்ணெய் கிணறுகள் ஆகியவற்றில் ஏவுகணைகள் தாக்குதலால் காணப்படுகிறது.

ஈரானில் இந்திய மாணவர்கள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். அவர்களை மீட்க வேண்டும் என்ற எழுந்த கோரிக்கையின் படி இந்திய மாணவர்களை மீட்க ஆபரேஷன் சிந்து என்ற நடவடிக்கையை மத்திய அரசு ஏற்படுத்தியது. இதன் பணிகள் ஈரான் மற்றும் அர்மேனியா நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டது.

முதற்கட்ட பணியாக ஈரானில் இருந்து 110 மாணவர்களே பஸ்கள் வாயிலாக அண்டை நாடுகளுக்கு அதாவது அர்மேனியாவிற்கு வரவழைக்கப்பட்டது. அர்மேனியாவின் தலைநகரம் யெரெவான்-க்கு அழைத்து வரப்பட்டு பின் சிறப்பு விமானங்கள் மூலமாக நேற்று இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று காலையில் டெல்லி வந்த விமானத்தில் இந்திய மாணவர்கள் ஆன 110 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாணவர்களை மீட்பதற்காக உதவிய ஈரான் மற்றும் அர்மேனிய நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளது இந்தியா. ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வர வேண்டாம் என்றும், ஈரான் நாட்டு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஈரானில் வாழும் இந்தியர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது இந்திய தூதரகம்

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram