இணைய வரலாற்றில் இதுவரை காணாத பெரிய தரவு நீர் சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன்படி உலகெங்கிலும் உள்ள 1600 கோடி பயனர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக google, gmail , telegram, apple போன்ற முக்கிய சேவைகளிலிருந்து பாஸ்வேர்டுகள் திருடப்பட்டு பாஸ்வேர்டுகள் “டார்க் வெப்” (DARK WEB ) என்ற இணையத்தில் மறைக்கப்பட்ட பகுதி தளங்களுக்கு விற்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதன்படி ஹேக்கர்கள் இந்த தகவல்களை பயன்படுத்தி google கணக்குகள், டெலிகிராம், முகநூல் மற்றும் மின்னஞ்சல் போன்ற ஊடகங்களின் மூலம் ஆன்லைன் சேவைகளை தவறாக பயன்படுத்துவார்கள்.
ஹாக்கர்கள் ஒருவரின் மொபைலுக்கு வலைதளத்தின் மூலமாக போலியான குறுஞ்செய்தியை அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்புவர். அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை அறிய வேண்டுமெனில் லாகின் கேட்கும். லாகின் செய்ய பாஸ்வேர்டு தேவைப்படும். பாஸ்வேர்டு பயன்படுத்தும் பட்சத்தில் ஹேக்கர்கள் அதை எடுத்துக் கொள்வார்கள்.
பாஸ்வேர்டுகளை வைத்து வங்கியில் இருந்து பணம் எடுப்பது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவர். தெரியாத எண்ணில் இருந்து அல்லது மின்னஞ்சலில் இருந்து இணைப்புகளை அனுப்பினால் அதை பயன்படுத்த வேண்டாம் என்றும், ஒரே பாஸ்வேர்டை அனைத்து வங்கி கணக்குகள் அல்லது இதர சேவைகளுக்கு பயன்படுத்தாதீர்கள் என்றும் சைபர் கிரைம் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆன்லைன் கணக்கு இருக்கு உடனடியாக தனித்துவமான பாஸ்வேர்டுகளை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக பாஸ்வேர்ட் மேனேஜர்ஸ் பயன்படுத்துங்கள். அதாவது லாஸ்ட் பாஸ் மற்றும் 1 பாஸ்வேர்ட் போன்றவற்றின் மூலம் கடவுச் சொற்களை உருவாக்குங்கள். நீண்ட நாட்களுக்கு மாற்றாமல் இருந்தால் பாஸ்வேர்டை உடனே மாற்றி விடுங்கள். ஏனெனில் ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருந்தால் அதனோடு தொடர்புடைய மற்ற கணக்குகளும் ஹேக் செய்யப்படும் அபாயம் உள்ளது. தெரியாத எண்களில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தவிர்த்து விடுங்கள். இதன் மூலம் இணையவள்ளியின் மோசடிகள் மற்றும் பண திருட்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.