குஜராத் : குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குஜராத் மாநிலம் ஆமதாபாத் வெள்ளம் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அம்ரேலி, ராஜ்கோட், போர்பந்தர், கட்ச், வல்சாத், ஜூனாகாத், சூரத், படான், துவாரகா மற்றும் காந்திநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்ப படையினர் உதவி புரிந்து வருகின்றனர். பொடாட் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கார் அடித்து செல்லப்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மூன்று பேர் காணாமல் போனதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தெரிவித்துள்ளார் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி.
குஜராத்தை புரட்டிப்போட்ட இந்த மலையானது கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 22 பேரை பலியாகி உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றன கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலரை காவு வாங்கி இருக்கிறது. குஜராத்தில் மழை முன்னெச்சரிக்கையாக பாவ் நகர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாவ் நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு காணப்படுகிறது. பாதிக்கப்பட்டு ள்ள அனைத்து மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்யுமாறு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.