சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!! சோகத்தில் குடும்பத்தினர்!!

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர், நாரணாபுரம் அனுப்பங்குளம் சாலையில் ‘ஶ்ரீ மாரியம்மன் ஃபயர் ஒர்க்ஸ்’ என்ற பெயரில் பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலைக்கு PESO எனப்படும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமம் பெற்றுள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி வகை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்திப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தநிலையில், பிற்பகல் 3.40 மணியளவில், ‘மணி மருந்து’ எனப்படும் வெடிபொருள் பொருத்தப்பட்ட பேன்சி பட்டாசுகளுக்கான உற்பத்தி பகுதிக்கு கொண்டு செல்லும் வேளையில் ஏற்பட்ட உராய்வால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த வெடி அதிக அதிர்வை ஏற்படுத்தியதால், சம்பந்தப்பட்ட அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இதில் அங்கு பணிபுரிந்து வந்த முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த கார்த்திகேயன் (24), லட்சுமி (45) மற்றும் சங்கீதா (40) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இந்த சம்பவம் தொழிலாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகள் மீதான கேள்விகளை எழுப்பி, மீண்டும் ஒருமுறை பட்டாசு தொழிலகங்களில் பாதுகாப்பு மரபுகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிவாரண நிதியாக உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 4,00,000 பலத்த காயமடைந்தோருக்கு ரூபாய் 1,00,000 லேசான காயமடைந்தோருக்கு ரூபாய் 50,000 அளித்துள்ளார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram