தமிழகத்தில் 55 IAS அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்!! தமிழ்நாடு அரசு உத்தரவு!!

தமிழ்நாடு அரசின் நிர்வாக கட்டமைப்பில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய மாவட்டங்கள் மற்றும் நகராட்சிகளில் புதிய கலெக்டர்களும் ஆணையர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

முக்கிய நியமனங்கள்:

ராஜேந்திர ரத்னூ தமிழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷில்பா பிரபாகர் சதீஷ் – வணிகவரி.

மற்றும் பதிவுத்துறை செயலாளர்

சங்கர் – உயர் கல்வித் துறை செயலாளர்.

வள்ளலார் – சமூக சீர்திருத்தத் துறை செயலாளர்

சமயமூர்த்தி – மனிதவள மேலாண்மைத் துறை

விஜயகுமார் – நில சீர்திருத்த ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களின் மாற்றங்கள்:

திருச்சி – வெ. சரவணன், மதுரை – கே.ஜே. பிரவீன் குமார், விருதுநகர் – என்.ஓ. சுபபுத்ரா, சிவகங்கை – கா. பொற்கொடி, செங்கல்பட்டு – தி. சினேகா, ஈரோடு – ச. கந்தசாமி, நாமக்கல் – துர்கா மூர்த்தி, திருப்பூர் – நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ்,

பெரம்பலூர் – அருண்ராஜ்.

மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம்:

திருச்சி மாநகராட்சிக்கு – வி. மதுபாலன், திருப்பூர் – எம்.பி. அமித்,

நெல்லை – மோனிகா ராணா, தூத்துக்குடி – பானோத் ம்ருகேந்தர் லால், ஆவடி – ரா. சரண்யா

முக்கிய நகராட்சி மற்றும் நிர்வாக பதவிகள்:

கோ.பிரகாஷ் – சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர்.

நாகராஜன் – வணிக வரி ஆணையர்.

சு.சிவராசு, ஜெ.விஜயராணி, தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி திட்டங்களில் தலைமைப் பொறுப்பேற்கின்றனர்.

மாற்றத்தின் பின்னணி:

இந்த மாற்றங்கள் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், அனுபவமிக்க அதிகாரிகளை முக்கிய பகுதிகளுக்கு நியமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram