இஸ்ரேல் தாக்குதலால் 55000 நெருங்கும் பலி எண்ணிக்கை!! காசாவின் போர் நிலவரம்!!

55 thousends killed in Israeli attack
காசா:   ஹமாஸ் ஆயுத குழுவினரால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 55,000 நெருங்கியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் , 251 பேரை பிணை கைதிகளாக பிடித்து சென்றுள்ளது. ஹமாஸ் ஆயுத குழு மீது போர் அறிவித்ததில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
பணய கைதிகள் பலரை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணுவ நடவடிக்கையின் படியும் இஸ்ரேல் மீட்டு வருகிறது. ஹமாஸ் ஆயுதக் குழுவினால் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 58 பேர் பிணை கைதிகளாக உள்ளனர் என்றும், இதில் 25 க்கும் மேல் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை  நெருங்கியுள்ளது.
ஆயுத குழுவினரால் இதுவரை உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 54,981 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களை விட காயமடைந்து உயிர் தப்பித்தோர் எண்ணிக்கை இதுவரை  1,26,920 பேர் ஹமாஸ் ஆயுத குழுவினர் உட்பட காசா முனையில் தப்பித்துள்ளனர். இதற்கு முன்னதாக ஞாயிற்று கிழமை காலையில்  நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் உதவி மையம் அருகே இஸ்ரேல் திடீர் துப்பாக்கி தாக்குதலின் போது 25 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதில் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலளித்த கொடுத்த இஸ்ரேல் ராணுவ முகாம்கள் அருகே சந்தேகத்திற்கிடமான நபர்களாக இருந்ததால் தாக்குதல் நடத்தியதாக விளக்கம் அளித்துள்ளது.
தற்போது ஆங்காங்கே போர் நடந்து வருவதால் உலகில் பதற்றநிலை பரவி வருகிறது. குறிப்பாக இந்தியா -பாகிஸ்தான் போர், இஸ்ரேல்-  ஹமாஸ் போர் மற்றும்  ரஷ்யா- உக்ரைன் போர் ஆகியவை குறிப்பிடத்தக்கது.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram