Cricket : தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை பெற்று வருவது குறித்து தற்போது ரிஸ்வான் மீது சர்ச்சை எழுந்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடிய இரு போட்டிகள் தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறி உள்ளது. இதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர் பாகிஸ்தான் வீரர்கள்.
இவ்வாறு இருக்க பல மாதங்களுக்கு முன்பு இமாம் உல் ஹக் பேசிய வீடியோ தற்போது ரிஸ்வான் மீது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் மட்டுமில்லாமல் இதற்கு முன் நடைபெற்ற முத்தரப்பு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விகளை சந்தித்து வந்தது. அப்போது சில மாதங்களுக்கு முன்பு தொடக்க வீரரான இமாம் உல் ஹக் அளித்த பேட்டி ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதில் அவர் அப்போது இருந்த கேப்டன் ரிஸ்வான் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்று பதில் அளித்தார், மேலும் அவர் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அவர் சிறப்பாக வழி நடத்தினார் அது மட்டுமல்லாமல் ஹோட்டல் அறையில் இருந்து எந்த அறையில் நமாஸ் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்கென தனி whatsapp குரூப்பை வைத்திருந்தார். எந்த நேரத்தில் தொழுக வேண்டும் என்பதையும் சரியாக வீரர்களுக்கு அறிவுறுத்தி வந்தார். மேலும் முஸ்லிமல்லாதவர்கள் அந்த அறைக்கு செல்லாமல் இருப்பதை பார்த்துக்கொண்டார் எனக் கூறியது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதனை தொடர்ந்து ஊடகத்தினர் பாகிஸ்தானின் வீரர்கள் போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டு நேரம் செலவு செலவிடுவதை விட இது போன்ற தொழுகைக்கு அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர் இதுவே அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைகிறது, எனவும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.