சிறிது நாட்கள் ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின்!! இன்று டிஸ்சார்ஜ் இல்லை!!

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என அவரது சகோதரர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 21 காலை நடைபயிற்சிக்குச் சென்ற போது சிறிய தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை சார்பில் முதலமைச்சருக்கு மூன்று நாட்கள் ஓய்வு அவசியம் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “முதல்வர் உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று பரிசோதனைகளின் முடிவுகள் வந்த பிறகு டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனை அறிவிக்கும்” என தெளிவுபடுத்தினார். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையிலேயே இருந்து நிர்வாக பணிகளை மேற்கொண்டுவருகிறார். சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்த தகவலின்படி, உங்களுடன் ஸ்டாலின் முகாமுகள் திட்டமிட்டபடி நடைபெறுவதை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்றும் மக்களிடம் மனுக்கள் மீது தீர்வு உறுதி செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

முதல்வரின் உடல்நிலை குறித்து நேரில் சந்தித்து நலம் விசாரிக்க முக்கிய தலைவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் நல விசாரணையில் பங்கேற்றனர். இந்நிலையில், மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை முதல்வர் ஸ்டாலின் திரும்ப வீடு செல்லமாட்டார் என்பதுதான் சமீபத்திய அப்டேட். மக்களுக்கு அவ்வப்போது அவர் பணிகளை தொடர்ந்து செய்யும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி.

 

 

 

 

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram