தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஆட்சியர்கள் ஆகியோருக்கு தலைமைச் செயலகம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை கிளையில் சரவணன் என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரு நாய்களை முறைப்படி கட்டுப்படுத்தாததால் நாள்தோறும் பல சிறுவர்கள் முதியவர்கள் என தாக்கப்பட்டு வருகின்றன.
இதில் பலர் காயமடைவதோடு, சிலர் உயிரிழக்க நேரிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் எனவே தமிழகத்தில் உள்ள மாநில தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற பொதுச் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் திரு.சுப்பிரமணியம் மற்றும் திரு. அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தெரு நாய்கள் கடிப்பதால் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழப்பதாகவும் அவற்றை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள், முதியவர்கள் பாதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
இது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், தெருநாய்களை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.