மதுரை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுவதால் தவெக தலைவர் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தலைவர் விஜய் வெளியிட்டு இருந்த அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து இரண்டாவது கடிதம் இது என்று தொடங்கியுள்ளார். மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் அரசியல் இயக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பும், பேர ஆதரவும் அரசியல் களத்தில் நிரூபிக்கப்பட உள்ளது.
அந்த வகையில் கனவு நம் நனவாக இலக்கை எட்டி புரட்டிப் போடக்கூடிய நிகழ்ச்சிகள் சில மாதங்களிலேயே நிகழும். 1967 மற்றும் 1977 ஆகிய தேர்தல்களில் வெற்றி விளைவுகளை இந்த மண் 2026 சட்டமன்றத் தேர்தலில் காண வாய்ப்புள்ளது. மாபெரும் சக்தியாக நீங்கள் திருப்புமுனை தருணத்தை தரப்போவது நிச்சயம். 32 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இயக்கமாக இருந்து தினம் தினம் மக்கள் மனம் அறிந்து சொல்வது அடர்ந்த மற்றும் ஆழ்ந்த உண்மை இருக்கிறது.
இதை அனைவரும் கூடிய விரைவில் அறியத்தான் போகிறார்கள். தமிழக மக்களை உயிராக போற்றி மதிக்கும் விஜய் பற்றி அனைவரும் அறிந்ததே. என் மீது வைத்திருக்கும் அன்பிற்கும், அக்கரைக்கும் உரிமையானவர் என்ற முறையில் ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த மாநாட்டிற்கு கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், பள்ளி சிறார்கள், முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுங்கள் என்று உரிமையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
மேலும், மாநாட்டுக்கு வரும்போது ஊருக்கு திரும்பும் போதும் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவ கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டுகிறேன். தமிழக வெற்றிக்கழகம் என்பது தகுதியும் பொறுப்பு மிக்க அரசியல் பேரியக்கம் என்பதை செயலில் காட்ட வேண்டியது நமது கடமை. மனசாட்சி உள்ள மக்களாட்சி என்ற உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்க வேண்டும். தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நம்மால் நிகழப்பட போவது உறுதி.
உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வும் ததும்பும் மதுரை மண்ணில் இதயம் திறந்த இரண்டு கைகளை விரித்து காத்திருப்பேன். உங்கள் விஜய் உரிமையுடன் அழைக்கிறேன் மதுரை பாரபத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம். நல்லதே நடக்கும்.வெற்றி நிச்சயம். என்ற வேண்டுகோளை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.