ம.க. ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!! பின்னணி என்ன??

மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறையில் பாமக மாவட்டச் செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் ம.க.ஸ்டாலின் மீது நேற்று காலை மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் போல அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த ஸ்டாலின் மீது திடீரென காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. அதில் இரண்டு குண்டுகள் வெடித்து அலுவலக கண்ணாடிகள் நொறுங்கியன. இதைத் தடுக்க முனைந்த அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் இளையராஜா, அருண் ஆகியோர் காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்டாலின் – அன்புமணி அணியைச் சேர்ந்த வெங்கட்ராமன் இடையே கடந்த 10 ஆண்டுகளாகவே கடும் அதிகாரப்போர் நிலவி வருகிறது. 2015இலிருந்தே இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து பல மோதல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த பழைய விரோதமே தாக்குதலுக்குக் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து பாமக தொண்டர்கள், வன்னியர் சங்கத்தினர் சாலையில் இறங்கி மறியல் செய்தனர். கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் டயர்கள் எரித்து போராட்டம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் 6 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை வேட்டையாடி வருகின்றனர். தாக்குதலாளர்கள் சென்னை நோக்கி தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. மொத்தத்தில், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பாமக உள்கட்சிப் போட்டியைச் சுற்றி இன்னும் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் மாறியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram