பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமைய விட மாட்டோம்!!  நெதன்யாகு திட்டவட்டம்!!

We will never allow a Palestinian state to be established!! Netanyahu's plan

பாலஸ்தீன அரசு அமைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பாலஸ்தீனம் தங்கள் நிலம் என மீண்டும் வலியுறுத்தி, இஸ்ரேலின் பாதுகாப்பே தங்களது முதல் முன்னுரிமை என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான மோதல் குறித்து விரிவாகப் பேசினார். “பாலஸ்தீன அரசுக்கு ஒருபோதும் நாங்கள் ஒப்புதல் அளிக்க மாட்டோம். அது எங்களுடைய நிலம். இஸ்ரேலின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, முழுமையான பாதுகாப்பு பொறுப்பை இஸ்ரேல் அரசே ஏற்கும். யோர்தான் ஆற்றின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து செயல்படும். பாலஸ்தீன நிர்வாகம் அமைந்தால், அது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும். ஹமாஸ் தாக்குதல்களே இதற்குச் சான்று,” என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதலுக்கு, இரு நாட்டுத் தீர்வு (Two-State Solution) தான் நிரந்தரத் தீர்வு என வலியுறுத்தி வருகின்றன. ஆனால், நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.

இருநாட்டுத் தீர்வு என்பது, இஸ்ரேலுக்கு அருகில் பாலஸ்தீன அரசு அமைவதை அங்கீகரிக்கும் ஒரு தீர்வுத் திட்டம். இது, இரு நாட்டு மக்களுக்கும் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் என அமெரிக்கா நம்புகிறது. ஆனால், இஸ்ரேல் இந்தத் தீர்வை ஏற்க மறுக்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நெதன்யாகுவுடன் இது குறித்து பலமுறை பேசியுள்ள போதிலும், அவரது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

நெதன்யாகுவின் இந்தப் பேச்சு, சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல அரபு நாடுகள் நெதன்யாகுவின் நிலைப்பாடு பிராந்திய அமைதியைக் கெடுக்கும் என எச்சரித்துள்ளன. ஆனால், இந்தப் பேச்சு உள்நாட்டு அரசியலில் அவருக்கு ஆதரவை அதிகரிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram