ஆன்லைனில் நில அளவிட்டிற்கான விண்ணப்பங்கள்!! எப்படி அப்ளை செய்ய வேண்டும் தெரியுமா!!

தமிழ்நாடை பொருத்தவரை நிலத்தை அளவீடு செய்ய முந்தைய காலத்தில் நில அளவிட்டு அதிகாரிகளை சந்தித்து, விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைத்து வந்திருந்தனர். உரிய நேரத்தில் அதிகாரிகளை சந்திக்க முடியாதது போன்ற காரணங்களால் இதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. மேலும், எந்த நேரத்திலும் இதற்கான விண்ணப்பத்தை மக்கள் ஏதுவாக பதிவதற்காக தமிழக அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருந்தார்.

இதன் மூலம் நில அளவீட்டிற்கான ஆன்லைன் பதிவை மேற்கொள்ளும் மக்களுக்கு நில அளவீடு செய்ய வரும் தேதி குறித்து மொபைல் போனில் உள்ள குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரருக்கு தகவல் அனுப்பப்படும். மாவட்ட அலுவலகங்களுக்கு செல்லாமலேயே https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய பக்கம் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இணைய பக்கம் உபயோகிக்க தெரியாதவர்கள், இ -சேவை மையங்களை அணுகி, விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு உரிய கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். குறுஞ்செய்தி கிடைத்த தேதியில் நில அளவீட்டிற்கு பிறகு, சர்வேயர் மற்றும் உரிமையாளரின் ஒத்துழைப்பு கையொப்பமிட்ட பிறகு, ஃபோர்டலில் நிலத்தின் வரைபடம் இணைக்கப்படும். https://eservices.tn.gov.in/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பதாரர் நிலத்தின் வரைபடத்தை பதிவிறக்கலாம்

என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த 2023 முதலே அமலில் உள்ளது. இதன் மூலம் மக்களின் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஆகியவை குறைக்கப்படுகிறது. மேலும் மக்களுக்கு ஏதுவாக இது செயல்படுத்த உள்ளது என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram