Chennai: ஒருவர் நண்பர்களுடன் சேது மது அருந்தி இறந்தது தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் செயல்படக்கூடிய தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த அந்த மாணவி சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அந்த மன உளைச்சலை போக்குவதற்கு தோழிகளுடன் இணைந்து மது அருந்த முடிவு செய்து பெண் தோழிகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இரவு முழுவதும் பிங்க் ஓட்கா எனப்படும் மதுவை முடிந்த அளவிற்கு குடித்துள்ளார். அப்போது அந்த மதுவிற்கு ஏற்ற உணவு சாப்பிடாமல் அதற்கு எதிர்மறையான உணவை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
அது அந்த மாணவிக்கு சரியாக ஏற்றுக் கொள்ளாமல் வாந்தி மயக்கம் என ஏற்பட்டு மயக்கம் போட்டு விழுந்துள்ளார். ஆனால் தோழிகள் அப்போது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் காலையில் எழுந்தவுடன் சரியாக இருக்கும் என எண்ணி அப்படியே விட்டுள்ளனர். ஆனால் காலையில் இருந்து பார்த்தபோது அந்தப் பெண் சுயநினைவை இழந்து கடந்ததாக கூறப்படுகிறது.
உடனே அந்த மாணவியின் நண்பனுக்கு அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இந்த மருத்துவமனைகள் மருத்துவர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் நாக்கு வறட்சியின் காரணமாக அவர் ஏற்கனவே அதீத மது உட்கொண்டதால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் தற்போது அந்த மாணவியின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன இதற்கு வேற எனும் காரணங்கள் இருக்கின்றனவா என தற்போது தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளது காவல்துறை.





