அமர்த்தியா சென் VS தேர்தல் ஆணையம்!! அம்மாவோடு வயது வித்தியாசம் கம்மி!! 92 வயது நோபல் வெற்றியாளருக்கு வந்த விசித்திர நோட்டீஸ்!!

Amartya Sen, Election Commission, SIR Revision, West Bengal News, TMC vs BJP.

கொல்கத்தா: இந்தியாவின் பெருமைக்குரிய பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது தேர்தல் ஆணையத்தின் ஒரு விசித்திரமான விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) போது இந்த முரண்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸுக்கான காரணம்: அமர்த்தியா சென் சமர்ப்பித்த ஆவணங்களின்படி, அவருக்கும் அவரது தாயார் அமிதா சென்னுக்கும் இடையிலான வயது வித்தியாசம் 15 வருடங்களுக்கும் குறைவாக இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் (ERONET) தானாகவே ஒரு ‘ரெட் சிக்னல்’ காட்டியுள்ளது. பொதுவாக இது இயற்கைக்கு மாறானது என்பதால், இதற்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் விளக்கம்: ஆனால், இது குறித்துப் பேசிய சென்னின் இல்லப் பராமரிப்பாளர், “அமர்த்தியா சென் பிறந்தபோது அவரது தாயாருக்கு 19 வயது 6 மாதங்கள். தேர்தல் ஆணையம் தான் அவரது தாயாரின் பிறந்த வருடத்தை 1914-லிருந்து 1918 எனத் தவறாக மாற்றிவிட்டு, இப்போ விளக்கம் கேட்கிறது. இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல்” எனப் புலம்பியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அதிரடி பதில்: இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், “சட்டம் மற்றும் தேர்தல் விதிகள் முன்னால் அனைவரும் சமம். புகழ்பெற்றவர்கள் என்பதற்காக யாருக்கும் சிறப்புச் சலுகை தர முடியாது” எனத் தேர்தல் ஆணையம் கறாராகத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அமர்த்தியா சென் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன் என்பதால்:

அவர் விசாரணை மையத்திற்கு வரத் தேவையில்லை.

வரும் ஜனவரி 16-ம் தேதி, வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) அவரது சாந்திநிகேதன் இல்லத்திற்கே நேரில் சென்று ஆவணங்களைச் சரிபார்ப்பார்.

அரசியல் மோதல்: திரிணாமுல் காங்கிரஸ் (TMC) இந்தப் பிரச்சனையை “வங்காளிகளின் பெருமையைச் சிறுமைப்படுத்தும் செயல்” என விமர்சித்துள்ளது. ஆனால், “பிழை இருந்தால் சரி செய்வது தானே முறை, இதில் அரசியல் எங்கே இருக்கிறது?” என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram