சுதந்திரக் காற்று வீசப்போகிறது ஈரான் போராட்டக்காரர்களுக்குப் பிரதமர் நெதன்யாகு கைகொடுத்தது ஏன்?
ஜெருசலேம்: அமெரிக்க அதிபர் ட்ரம்பைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஈரானில் வீதிக்கு வந்து போராடும் மக்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் ‘பவர்ஃபுல்’ ஸ்டேட்மென்ட்:
கொடுங்கோன்மைக்கு முடிவு: “ஈரான் மக்கள் விரைவில் கொடுங்கோன்மையின் (Yoke of Tyranny) பிடியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த நாள் வரும்போது, இஸ்ரேலும் ஈரானும் மீண்டும் நல்ல கூட்டாளிகளாக மாறுவார்கள்.”
வியக்க வைக்கும் தைரியம்: “ஈரான் குடிமக்களின் அசாத்தியமான துணிச்சலைக் கண்டு இஸ்ரேலும் ஒட்டுமொத்த உலகமும் வியந்து நிற்கிறது. அவர்கள் தங்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் போராடுகிறார்கள்.”
கூட்டு நடவடிக்கை: இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருடன் நெதன்யாகு ஆலோசித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏன் இந்த ஆதரவு? கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் – ஈரான் இடையே நடந்த 12 நாள் போருக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே கடும் பகை நிலவுகிறது. தற்போது ஈரானின் உள்ளேயே ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்துள்ளதை, ஈரான் அரசைப் பலவீனப்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பாக இஸ்ரேல் கருதுகிறது.
ஈரான் பதிலடி: “எங்கள் நாட்டுப் பிரச்சனையைத் தூண்டிவிட்டு குளிர் காயப் பார்க்கிறது இஸ்ரேல்” என ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானைத் தாக்கினால், பதிலுக்கு இஸ்ரேல் மீதும் அமெரிக்கக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.




