தங்குமிடம் கோரி உருக்கமான மனு:
தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. சங்கீதா தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவில், தனக்குத் தங்குவதற்கு இடம் இல்லை என்ற உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். “நான் நீதிமன்றத்தை நாடினால், எங்களது நீலாங்கரை இல்லத்தில் வசிக்க என்னை அனுமதிக்க முடியாது என்று விஜய் தனது வழக்கறிஞர் மூலம் முட்டுக்கட்டை போடுகிறார்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரிட்டிஷ் குடிமகள் வாதம்:
தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சங்கீதா, தனக்கு இந்தியாவில் வேறு தங்குமிடங்கள் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார். “விவாகரத்து வழக்கு முடியும் வரையிலோ அல்லது விஜய் இதற்கு இணையான மாற்றுத் தங்குமிடத்தை எனக்குத் தரும் வரையிலோ, நீலாங்கரை வீட்டிலேயே வசிக்க எனக்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால் நான் பெரும் சிரமத்திற்கு ஆளாவேன்” என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தரப்பு பதில் என்ன?
இந்த விவகாரத்தில் விஜய் தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட காரணங்களைக் காட்டித் தங்குவதற்குத் தடை கோரப்படுவதாகத் தெரிகிறது. ஒரு பக்கம் விஜய் அரசியல் மேடைகளில் பெண்களுக்காகப் பேசி வரும் சூழலில், அவரது சொந்த வாழ்க்கையில் எழுந்துள்ள இந்த ‘தங்குமிடப் போராட்டம்’ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.

