மூட்டை மூட்டையா கடன் இருக்கா?? ஒரே ஒரு விளக்கு போதும்.. உங்கள் தலையெழுத்தையே மாற்றும்!!

Kumbakonam Temple, Debt Relief Remedy, Thirucherai Temple, Runa Vimochana Lingeshwarar, Pariharam for Loans, Tamil Spiritual News, Monday Pariharam, Debt Free Life, Sivan Temple Tamil, Astrology Remedies

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவில். இங்குள்ள தனிச்சன்னதியில் வீற்றிருப்பவர்தான் ரிண விமோசன லிங்கேஸ்வரர். “ரிணம்” என்றால் கடன், அதிலிருந்து விமோசனம் (விடுதலை) அளிப்பவர் என்பதால் இவருக்கு இப்பெயர். எவ்வளவு பெரிய கடன் தொல்லையாக இருந்தாலும், வறுமை வாட்டினாலும் இவரைச் சரணடைந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். இதற்கான பரிகார முறை மிகவும் எளிமையானது ஆனால் சக்தி வாய்ந்தது.

பரிகார முறை: தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் இக்கோவிலுக்குச் சென்று, ரிண விமோசனேஸ்வரருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். திங்கட்கிழமை ராகு காலத்திற்கு முன்னரோ அல்லது மாலை வேளையிலோ செல்வது சிறப்பு. 11-வது வாரம் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, உங்களால் முடிந்த அன்னதானத்தை வழங்க வேண்டும்.

ஒருவேளை நேரில் செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தே சிவபெருமானுக்கு திங்கட்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி “ரிண விமோசன ஸ்தோத்திரம்” பாராயணம் செய்யலாம். இந்த வழிபாட்டைத் தொடங்கிய சில வாரங்களிலேயே தேங்கிக் கிடந்த பணம் வசூலாவது, புதிய தொழில் வாய்ப்புகள் கிடைப்பது எனப் பொருளாதார மாற்றங்கள் நடப்பதை நீங்கள் உணர முடியும். வறுமை நீங்கி செல்வம் பெருக இத்தல வழிபாடு ஒரு மகா ரகசியமாகும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram