பெட்ரோல் விலை 20% உயர்வு குறித்து டிரம்ப் அதிரடி!! ஈரான் அணு ஆயுதம் அழிய இதுதான் விலை!!

trump-on-crude-oil-price-hike-iran-israel-war-2026-update

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போர் காரணமாக உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த மோதலின் எதிரொலியாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் வரலாறு காணாத வகையில் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விளக்கத்தை அளித்துள்ளார். “கச்சா எண்ணெய் விலை உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த விலை உயர்வு என்பது ஒரு தற்காலிகமான விஷயம் மட்டுமே என்று வாதிடுகிறார்.

டிரம்பின் கூற்றுப்படி, ஈரானின் அணு ஆயுத வல்லமை முற்றிலும் அழிக்கப்படும் வரை உலகச் சந்தையில் இத்தகைய மாற்றங்கள் நிகழும். “உலகப் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் நாம் செலுத்த வேண்டிய மிகச் சிறிய விலை இது. ஈரானின் அணு ஆயுதத் திறன் முடக்கப்பட்ட அடுத்த நிமிடம், எண்ணெய் விலை மிக வேகமாகப் பாதாளத்திற்கு இறங்கும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்த யதார்த்தமான உண்மையை உணராமல் விலை உயர்வைப் பற்றிப் பேசுபவர்களை “முட்டாள்கள்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போது கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 110 டாலரைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. ஹோர்மோஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதும், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுமே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்த அதிரடிப் பேச்சு, எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram