குழந்தையை கூட விட்டு வைக்காத ஆளும் கட்சியின் அட்டூழியம்!! அண்ணாமலை கண்டனம்!!

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் தமிழக அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் சிறுமியை கடத்திச் சென்று, அவர்களை ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் மிரட்டியதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில், திமுக கொண்டலாம்பட்டி பகுதி அவைத்தலைவர் பதவியில் உள்ள செந்தூர் கார்த்தி மற்றும் அவரது நண்பர் தொடர்புடையவர்கள் என கூறப்படுவது விவகாரத்தை மேலும் சர்ச்சைக்குரியதாக மாற்றியுள்ளது. இந்த குற்றச்சாட்டு வெளிவந்ததுடன், சமூக வலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்பும் விவாதங்களும் எழுந்துள்ளன. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளை இவ்வாறு மிரட்டுவது வெட்கக்கேடானதும் மனிதத்தன்மையற்ற செயலாகும். ஆளும் கட்சி என்ற மமதையில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி வருகிறது. சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவித தளர்வும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து, விரிவான மற்றும் விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தாய் மற்றும் சிறுமிக்கு முழுமையான பாதுகாப்பும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் வெளிவந்ததையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பல கேள்விகள் எழுந்துள்ளன. அரசியல் ஆதிக்கம் மற்றும் செல்வாக்கு காரணமாக சட்டம் தளர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram