சொந்த நாட்டின் மீது குண்டு வீச்சு!! தென்கொரியாவில் நிலவும் பதற்றம்!! பின்னணி என்ன??

Tensions in South Korea

தென்கொரியா வட கொரியாவுக்கு எதிராக ஊர் பெயர்ச்சியில் அமெரிக்காவுடன் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சியின் போது நடந்த அசம்பாவிதம் தான் தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியா நாடு அமெரிக்காவுடன் சேர்ந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது இதற்கு காரணம் வட கொரியாவுக்கு எதிராக போர் பயிற்சிசெய்து வருகிறது. இதில் தென் கொரியாவின் போர் விமானத்திலிருந்து அங்குள்ள குடியிருப்புகள் மீது விழுந்து வெடித்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இதில் அங்கு எட்டு பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் நீண்ட நாட்களாக மோதலில் இருந்து வருவது தெரிந்தவையே, தென்கொரியாவை வடகொரியா விட ஒப்பிடும்போது வடகொரியா நாடு தான் பணம் வாய்ந்ததாக தெரியும், ஏனெனில் ஏவுகணை அணுகுண்டு ஆயுத பலம் என வடகொரியா பலமாக வைத்துள்ளது ஆனால் தென்கொரியாவிடம் போர் ஆயுதங்களில் பற்றாக்குறை தான் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா போர் விமானங்கள் தீவிர பயிற்சி மேற்கொண்ட போது கே எஃப் 16 ரக போர் விமானங்கள் திடீரென அங்கிருந்த குடியிருப்புகள் மீது வெடித்தது இதில் கட்டிடங்கள் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் இரண்டு பேர் பலத்த காயமும் ஆறு பேர் லேசான காயமும் உயிர் சேதம் ஏதும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் தற்போது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து கூறுகையில் எம் கே 82 குண்டுடன் போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்ட போது எதிர்பாராத விதமாக 8 குண்டுகள் கீழே குடியிருப்புகள் மீது விழுந்து வெளித்துள்ளது தெரியவந்தது. அதோடு அங்கு பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வேண்டும் என்றும் அந்த நாட்டின் விமானப்படை கூறியுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram