வீட்டில் அத்தியாவசிய எலெக்ட்ரிசிட்டி பொருட்கள் இல்லையா!! வாங்குவதற்கான தமிழக அரசின் புதிய திட்டம்!!

வீட்டில் அத்தியாவசியமாக உபயோகிக்க தேவைப்படும் பொருட்களான ஃப்ரிட்ஜ், இருசக்கர வண்டி (பைக்), டிவி ஆகியவை இல்லையா! இதோ தமிழக அரசின் அதிரடி திட்டம். 75 சதவீதம் அமௌன்ட்டை தமிழக அரசே வழங்கிவிடும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களை சூழ்நிலை காரணமாக வாங்க முடியாதவர்களுக்கு பயனாக இருக்கும் என்று தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இன்றைய காலங்களில் பைக் என்பது வேலை செய்வதற்கு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் இதன் விலை காரணமாக பலரும் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைப் பற்றி கலந்தாலசித்த தமிழக அரசு அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவு வங்கி மூலம் வழங்குவதற்கான புதிய திட்டத்தை அதிகமுகம் செய்துள்ளது.

தமிழக அரசின் புதிய திட்டத்தின் படி, கூட்டுறவு பாதுகாப்புத் துறையில் வீட்டிற்கு தேவையான எலக்ட்ரிசிட்டி பொருட்களை வாங்குவதற்கு கடனுதவி வழங்கப்படுகின்றது. இதன் மூலம் தேவைப்படுபவர்கள் அவர்களது வீட்டிற்கு பைக், ஃப்ரிட்ஜ் மற்றும் டிவி ஆகியவற்றை தேர்வு செய்து கொண்டு, அதன் பில், அடையாள சான்று, முகவரி சான்று ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கூட்டுறவு மற்றும் அதை சார்ந்த அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இதன் மூலம் அந்த பொருள்களுக்கு 75 சதவீதம் தமிழக அரசு பணம் கட்டிவிடும். இதற்காக 14 சதவீதம் வட்டி விகிதமும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் எல்லாருக்கும் எல்லாம் என்ற சொல்லை வழிநிறுத்தி இதை செய்யும் முற்பட்டு உள்ளது தமிழக அரசு. இது பலருக்கும் வரவேற்கத்தக்க ஒன்று என்று பதிவிட்டு வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram