கிரெடிட் கார்டு குறித்து மறைக்கப்பட்ட உண்மைகள்!! லாபம் காணும் வங்கிகள்!!

Hidden facts about credit cards

கிரெடிட் கார்டுகளை ஒவ்வொரு வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கி வருகின்றனர். அடிக்கடி செல்போன்கள் மூலம் அழைத்து உங்களுக்கு கிரெடிட் கார்டு வேண்டுமா என கேட்டு கிரெடிட் கார்டின் உடைய நன்மைகள் குறித்து எடுத்துரைத்து எப்படியாவது வாடிக்கையாளர்களை கிரெடிட் கார்டுகளை வாங்க வைத்து விடுகின்றனர்.

இதற்குப் பின்னால் மிகப்பெரிய சூட்சமம் இருக்கிறது. வங்கிகளுக்கான வருவாயே இந்த கிரெடிட் கார்டுகளில் தான் அடங்கியுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ? இதுதான் உண்மை. பொதுவாக ஒருவர் கிரெடிட் கார்டு பெரும் பொழுது அந்த கிரெடிட் கார்டின் பயன்கள் குறித்து முழுவதுமாக அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரிந்து கொள்ளாத பட்சத்தில் அது வங்கிக்கு சாதகமாக மாறிவிடுகிறது.

இப்பொழுது நீங்கள் ஒரு கிரெடிட் கார்டை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

✓ முதலில் கிரெடிட் கார்டின் உடைய லிமிட் உங்களுடைய மாத வருமானத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்

✓ அதனைத் தொடர்ந்து செலவுகளை கையாளுவதற்கான திறமை உங்களிடம் இருத்தல் வேண்டும்.

✓ இவற்றோடு கூடவே குறிப்பிட்ட நேரத்தில் கிரெடிட் கார்டில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை செலுத்துதல் மிக மிக அவசியமான ஒன்று.

மேலே குறிப்பிட்ட 3 இல் ஒன்றினை தவறவிட்டால் கூட கிரெடிட் கார்டில் விதிக்கப்படும் வட்டிகளை கட்ட நேரிடும். பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் பணத்தினை திருப்பி செலுத்துவதற்கு 45 நாட்கள் அவகாசம் அளிக்கிறது. இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் நீங்கள் செலவு செய்த பணத்தை மீண்டும் கிரெடிட் கார்டு செலுத்தி விட்டால் உங்களுக்கு பலவிதமான நன்மைகளை வாங்கி வழங்குகிறது. அதேசமயம் செலுத்த தவறும் பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் இவ்வளவு வட்டி என அதிக அளவு வட்டியை வங்கிகள் வசூலிக்கிறது.

வட்டி மட்டுமல்லாது வருடாந்திர கட்டணங்கள், அட்டை மறு வெளியீட்டு கட்டணங்கள் போன்றவற்றையும் வங்கிக்கு செலுத்த நேரிடும். மேலும் நீங்கள் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு அனைத்து இடங்களிலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி தற்பொழுது அதிகமாகி இருக்கிறது. அவ்வாறு பரிவர்த்தனையும் மேற்கொள்ளும் பொழுது பரிவர்த்தனையை பெறக்கூடிய இடத்தில் உள்ளவர்கள் வங்கிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பரிவர்த்தனைக்காக செலுத்துகின்றனர். இவைதான் வங்கிகளுக்கான முக்கிய வருவாயாக இன்று வரை திகழ்கிறது.

குறிப்பு :-

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மட்டும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க் போன்ற பெரிய வங்கிகள் வழங்கிய கிரெடிட் கார்டுகளில் இருந்து இந்தியாவில் மட்டும் கிரெடிட் கார்ட் செலவானது 1,80,000 கோடி ரூபாய் ஆக அதிகரித்திருப்பதாகவும் இது முந்தைய மாதத்தை விட குறைவானது என்றும் சுட்டிக் காட்டி இருக்கின்றனர்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram