தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பிரதிபலிக்கக்கூடிய காஞ்சிபுரம் பட்டு!! புடவைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Kanchipuram silk reflects the traditional arts of Tamils

காஞ்சிபுரம் பட்டு ஆடை தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்திய முழுவதும் புகழ்பெற்றதும், பெருமைக்குரியதும் ஆகும்.

காஞ்சிபுரம் பட்டு உடைகள் மூலமாகவும் தூய திரைபட்டு (pure mulberry silk) நூல்களால் நெய்யப்படுகின்றன.

இது மிக வலுவானது, மென்மையானது, மற்றும் அதிக காலம் நீடிக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.

தங்க/வெள்ளி ஜரி (Zari):

பட்டு ஆடையில் எல்லைகள் மற்றும் பல்லுகள் தங்கம் அல்லது வெள்ளி போன்ற ஜரியால் அலங்கரிக்கப்படுகின்றன இது மிகச் சிறப்பு வாய்ந்தது.

காஞ்சிபுரம் ஜரிகை மிக உயர்தரமானதாக இருக்கும். அசல் ஜரி வெண்கலத்தில் வெள்ளி பூசல் மற்றும் சில சமயம் பொற்கலவையுடன் தயாரிக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள்.

தனித்துவமான வடிவமைப்புகள்:

கோவில் கோபுரங்கள், மயில், யாளி( யானை ), விலங்கு வடிவங்கள், பல்லவ/சோழகால கலையை பிரதிபலிக்கும் நுண்ணிய கலைக்கூறுகள் இந்த இடம் பெறுகிறது.

ஒவ்வொரு பட்டு ஆடையும் ஒரு கலையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அமைதியான, புகழ்மிக்க நகரம்:

காஞ்சிபுரம் “பட்டு நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது.

பல தலைமுறைகள் குடும்ப வாரிசுகளாக பட்டு நெய்வதை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

கல்யாண புடவைகளின் முதல் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் இங்கு பட்டுப் புடவைகள் எடுக்கப்படுகிறது.

தமிழரின் திருமணங்களில் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

“மணப்பெண்ணின் கனவு – ஒரு காஞ்சிபுரம் புடவை!” கூறுகிறார்கள்.
நீங்கள் விரும்பும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வகையிலும் காஞ்சிபுரத்தில் பட்டு ஆடைகள் நெய்து தரப்படுகிறது இதனால் இந்தியா முழுவதும் சிறந்து விளங்குகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram