CRICKET: நடைபெற்று வரும் ipl தொடரில் இன்று இரவு டெல்லி மற்றும் கொல்கத்தா இரு அணிகளும் மோதவுள்ளன. இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் விளையாடிய போட்டியில் யார் முதலிடம்.
டெல்லி அணி கடைசியாக பெங்களுரு அணியுடன் விளையாடிய போட்டியில் தோல்வியை தழுவியது. இதனால் பெங்களுரு அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா அணி இதுவரை மூன்று போட்டிகளை வெற்றி பெற்றும் ஒரு போட்டி நடைபெறாமல் ஒரு புள்ளியும் பெற்று 7 வது இடத்திலும் உள்ளது.
இன்று டெல்லி அணி வெற்றி பெறுவதன் மூலம் முதல் இடத்திற்கு செல்லும், கொல்கத்தா அணி இனிவரும் அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இதுவரை இரு அணிகளும் 34 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடி உள்ளது. இதில் டெல்லி அணி 15 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 18 போட்டிகளிலும் வென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையே அதிகபட்ச ரன்னாக கொல்கத்தா அணி 278 ரன்களும், டெல்லி அணி 228 ரன்களும் அடித்துள்ளது. குறைந்த பட்ச ரன்னாக, கொல்கத்தா அணி 97 ரன்களும், டெல்லி அணி 98 ரன்களும் அடித்துள்ளது. இன்று மீண்டும் இந்த இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருகின்றனர்.