கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் 3 இங்கிலாந்து வீரர்கள் சதம்.
ஜிம்பாப்வே அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டி நேற்று மதியம் தொடங்கிய நிலையில் முதலில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்றது. முதலில் டாஸ் வென்று பவுலிங் செய்ய தேர்வு செய்தது ஜிம்பாப்வே அணி.
எனவே முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஜாக் ராலி நிதானமாக சிறப்பாக விளையாடி 171 பந்துகளை எதிர்கொண்டு 124 ரன்கள் எடுத்து சதத்தை பதிவு செய்து விக்கெட்டை இழந்தார். அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய டக்கெட் 134 பந்துகளை எதிர்கொண்டு 140 ரன்கள் குவித்தார் இதில் 20 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஒலி போப் சிறப்பாக விளையாடி 163 பந்துகளை எதிர்கொண்டு 169 ரன்கள் குவித்துள்ளார். இதில் 24 பவுண்டரிகள்,2 சிக்ஸர்கள் என அடித்து தற்போது வரை விக்கெட்டை இழக்காமல் இரட்டை சத்தத்தை நோக்கி விளையாடி வருகிறார் ஒலி போப். மறுமுனையில் மற்றொரு அதிரடி வீரரான ஹாரி புரூக் புதியதாக களமிறங்கி விளையாடி வருகிறார். இதனால் களமிறங்கிய முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் 3 வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.


