அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டு குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மாணவி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டிருந்தார்.
விசாரணை நடவடிக்கைகளில், மாணவிக்கு எதிராக பல்வேறு முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆதாரங்களை அழித்தல், சட்டவிரோதமாக அடைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் மருத்துவ சான்றுகள் வழக்கை உறுதிப்படுத்தின.
இதையடுத்து கடந்த மே மாதம் 28-ஆம் தேதி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஞானசேகரன் தரப்பில், தந்தை இல்லை, தாய் மட்டும் இருக்கிறார், தனது குடும்ப சூழல் கடினமானது என்பதோடு, பள்ளியில் படிக்கும் மகளுக்கு எதிராக பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டாலும், நீதிமன்றம் கடுமையான தண்டனை அவசியம் எனக் கருத்து தெரிவித்தது. அத்துடன், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான தண்டனை அவசியம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கு பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முன்மாதிரியாக இருக்கும்” என நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் அடிப்படையில், ஞானசேகரனுக்கு 30 ஆண்டு குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதுடன், ரூ.90,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றம் தீர்மானித்த 11 பிரிவுகள்: IPC 376(2)(n) பல முறை பாலியல் வன்கொடுமை, PC 354(B) நிர்வாணப்படுத்தும் நோக்குடன் தாக்குதல், IPC 366 கடத்தல், IPC 342 சட்டவிரோதமாக அடைத்து வைக்கும் IPC 506(ii) கொலை மிரட்டல், IPC 201 ஆதாரங்களை அழித்தல், IPC 323 காயம் ஏற்படுத்துதல், IPC 377 புறநிலை பாலியல் வன்கொடுமை, IPC 354(A) பாலியல் தொல்லை, IPC 376(D) கூட்டாக பாலியல் வன்கொடுமை, POCSO Act 6 & 10 சிறுவர்கள் பாதுகாப்பு சட்டம் இந்த வழக்கின் தீர்ப்பு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிபடுத்தும் விதமாக பெரிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.