கஞ்சா போதைக்கு பலியான மூதாட்டி!! கவலையை உண்டாக்கும் சிசிடிவி காட்சிகள் அவலம்!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கீழ்விஷாரம் கிராமத்தில், 80 வயது மூதாட்டி கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் இறுதி காலக்கட்டத்தை கழித்துக் கொண்டு தன் மாங்காய் தோப்பில் வசித்து வந்தார். நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பத்மநாபனின் மகன் 19 வயதுடைய நந்தகுமார் அந்த பகுதியில் குடிபோதையில் அங்கு வந்தார். முதலில் பேசுவதற்கே வந்தது போல நடந்தாலும், பின்னர் மூதாட்டியை அசிங்கமாக இழுத்துச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அதிலிருந்து தப்பிக்க முயன்ற மூதாட்டி கூச்சலிட்டதும், கோபத்தில் நந்தகுமார் அந்த மூதாட்டியை தரையில் தள்ளி, தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். இதில் மூதாட்டிக்கு பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரத்தில் ஆழ்ந்தனர். 80 வயது மூதாட்டி எனக்கூட பார்க்காமல் கஞ்சா போதையில் இதுபோல் நடந்து கொண்ட குற்றவாளியான நந்தகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்த சில சிசிடிவி காட்சிகள் இது தொடர்பான ஆதாரங்களாக போலீசாரிடம் சென்றுள்ளன.

இதுபோன்ற சம்பவங்கள், சமூகத்தில் மதிப்பையும் மனிதநேயத்தையும் கேள்விக்குள்ளாக்குவதாகவும், இளம் தலைமுறையின் குணாதிசயத்தில் ஏற்படும் மாற்றங்களை சிந்திக்க வைக்கும் வகையிலும் உள்ளது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram