பத்து ரூபாய் வாங்கி வைத்தியம் பார்த்த டாக்டர் மரணம்!! அரசிற்கே கொடை வழங்கிய வள்ளல்!!

Rs. 10 doctor death

டாக்டர் வள்ளல் என்று பலரால் போற்றப்பட்ட வேண்டிய ஒருவர் தான் டி.கே. ரத்தினம் பிள்ளை. இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் சேவையாற்றி இருந்தவர். 1959 ஆம் ஆண்டு தனது மருத்துவப் படிப்பை முடித்து விட்டுள்ளார். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளன. அதில் மூன்று பெண் பிள்ளைகள். இவரும் முதலில் மருத்துவத்தை ஆரம்பிக்கும் போது இரண்டு ரூபாய் கட்டணமாக பெற்று இருந்தவர். அன்று தொடங்கிய அந்த சேவை மனப்பான்மை தொடர்ந்து இக்காலத்திலும் நீண்ட நாட்கள் ஆகவே பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்தியா சீனா இடையே அப்பொழுது நடைபெற்ற போரின் போது, பொருளாதார வழங்க கோரி இந்திய மக்களிடம் இந்திய அரசு அப்பொழுது கேட்டுள்ளது. அடுத்த ஐந்து வருடத்திற்குள் அதை திரும்ப தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இவர் அப்பொழுது, தன் மகளுக்காக சேர்த்து வைத்த 83 பவுன் தங்க நகையை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதை மீண்டும் பெற்றுக் கொண்டு உள்ளார்.

ஆனால் உதவி கேட்டவுடன் கொடுக்கும் மனப்பான்மை உடையவராக நாட்டின் புதல்வராக செயல்பட்டுள்ளார். இன்றைய காலகட்டங்களில் சிறிய பிரச்சனை ஆயினும் ஸ்கேன் எக்ஸ் ரே என்று எடுக்கச் சொல்லும் மருத்துவர்களுக்கு இடையில் இவர் பத்து ரூபாய் கட்டணம் மட்டுமே வசூல் செய்து மருத்துவம் பார்த்து உள்ளார். இவருக்கு தற்பொழுது 96 வயது ஆகியதால் அண்ணார் இயற்கை மரணம் அடைந்துள்ளார். கடந்த கொரோனா காலகட்டத்தில் இவளது குடியிருப்பில் இருந்தவர்களுக்கு மூன்று மாத வாடகை வேண்டாம் என்று கூறியிருந்தவர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram