கிரிக்கெட்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உச்சமடைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக இந்த போட்டியில் வென்று சாதனை படைக்குமா அல்லது ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா? என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பான ஒரு போட்டியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் மக்களிடையில் இல்லை.
மேலும் இந்த போட்டி குறித்து இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவிக்கையில் ஆஸ்திரேலியா அணியின் மிகப்பெரிய ஆயுதம் என்றால் அது பேட் கம்மின்ஸ். அவர்தான் எதிரணி பேட்ஸ்மன்களுக்கு கடுமையான சவாலாக இருப்பார். அவரின் பந்துவீச்சு கேப்டன்சி மற்றும் ரன் அடிக்கும் திறன் இவர் என அனைத்து விதத்திலும் அவர் சிறந்த வீரராக தென்படுகிறார். இதே கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் மற்றொரு முக்கிய வீரராக நத்தன் லயன் இருப்பார் எனவும் கூறியிருக்கின்றனர்.
மேலும் மற்றொரு பீர் வீரர் யார் என்றால் டிராவீஸ் எடுத்தான் அவர் மணிக்கு நிதானமாக விளையாடி ரன் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி உறுதி செய்யக்கூடிய முக்கிய வீரர். எதிரணி வெற்றி பெற வேண்டுமானால் முதலில் இவரது விக்கெட்டை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். அதனால் இந்த வீரர்கள் எதிரணிக்கு அழுத்தத்தைக் கொடுத்து கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.