பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!! பரிதாபமாக பலியான தொழிலாளர்கள்!!!

விருதுநகர் மாவட்டம்: காரியாப்பட்டி அருகே வடகரை பகுதியில் அமைந்துள்ள யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலையில் பேன்சி வகை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் மூவரின் உயிர் பறிபோனது. உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலையின் உரிமையாளர் ராஜா சந்திரசேகரன் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஆலையின் மேற்பார்வையாளர் மற்றும் போர்மேன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வகை பட்டாசு ஆலைகளில் காலாண்டு தோறும் இதுபோன்ற விபத்துகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram