அப்பளம் போல் நொறுங்கிய கார்!! திருச்செந்தூர் பயணம் சோகத்தில் முடிந்தது!!!

தஞ்சையைச் சேர்ந்த உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி ஒருவர், கடந்த இரவு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்யச் சென்றிருந்தார். தரிசனத்தை முடித்து, மீண்டும் தஞ்சைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது தஞ்சை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சோகம் நிகழ்ந்தது. நீதிபதி பயணித்த கார், எதிரே வந்த ஒரு கனரக லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. மோதி நொறுங்கிய காரில் பயணித்த நால்வர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தோர் பட்டியலில், நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாவலர் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிகக் கடுமையான மோதல் காரணமாக, காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கிய நிலையில் காணப்பட்டது. காரில் இருந்த நீதிபதி மற்றும் மற்ற இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததும் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வழிகாட்டும் பணிகளை மேற்கொண்டனர்.

விபத்து நேர்ந்த இடத்தில் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் லாரி ஓட்டுநரின் தவறா அல்லது காரின் வேகமே காரணமா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த துயரச்சம்பவம் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்து ஆனந்தமாக வீடு திரும்பிய குடும்பத்தில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றவட்டாரத்திலும், சட்டத்துறையிலும் இந்த விபத்து பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram