ராஜ்யசபாவுக்கு எம்பி காலக்கெடு முடிவடைந்த நிலையில் புதிதாக எம்பிக்கள் அந்தப் பொசிஷனுக்காக அப்ளை செய்திருந்தனர். அவர்கள் மநீம தலைவர் மற்றும் திமுக உறுப்பினர் கமல், வழக்கறிஞர் வில்சன், சல்மா, சிவலிங்கம், அதிமுக தரப்பில் இன்பத்துறை, தனபால் ஆகியோர் சமீபத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இவர்களோடு 13 பேர் போட்டியிட தயாராக இருந்தனர். அவற்றுள் ஏழு பேருக்கு முறையான பரிந்துரை இல்லாததால் அவர்களின் மனுக்கள் தேர்தல் ஆணையம் சார்பில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மனு தாக்கல் செய்த முறையானவர்கள் அனைவரும் எம்பிக்கள் ஆகி உள்ளனர். திமுக சார்பில் கமல், வில்சன், சிவலிங்கம், சல்மா ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால் மற்றும் இன்பத் துறை ஆகியோரும் இன்றி எம்பிக்களாக தேர்வாகி உள்ளனர்.
மேலும் இதற்கான உறுதி சான்றிதழை கட்சித் துணை தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், எம்பி உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். இதனை எடுத்து போட்டியே இல்லாமல் ராஜ்யசபா எம்பி ஆகி விட்டார்களே! இதில் திமுக வின் சதி இருக்குமோ என்றபடி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எதிர் நோக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, திமுக விரைந்து தனது படையை தயார் செய்து வருகின்றது என்றவாறு பலர் தெரிவித்துள்ளனர்.