டெல்லி: ஈரான்-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் கடுமையாக தாக்கி கொண்டு வருகிறது. இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வருவதால் இந்திய ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நீண்ட காலமாக நடந்து வருகிறது. யுரேனியத்தை செறிவூட்டும் மையம், ராணுவ தளங்கள் போன்றவற்றை அழிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தற்போது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஈரானிலிருந்து ட்ரோன்கள் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேல் இந்த ட்ரோன்களை அசால்டாக தடுத்து வருகிறது.இந்தியாவானது தற்போது வரை இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் வெளியுறவுத்துறை அறிக்கையில், ” இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் தாக்குதலுக்காக தாங்கள் வருந்துகிறோம் என்றும், இரு நாடுகளுடன் நாங்கள் நட்புறவாக இருப்பதால் அமைதிக்காக எந்த உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும், தற்போது நடக்கும் பிரச்சனையை தூதரக மூலமாக பேச்சுவார்த்தையில் முடிக்க நாங்கள் எப்போதும் தயாராக உள்ளதாகவும், இரு நடுகல் ; யிலும் இந்திய தூதரகங்கள் தொடர்பில் இருப்பதாகவும், பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாகவும்.
அந்தந்த நாடுகளின் ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வலியுறுத்துவதாக கூறியது. இந்தியா -பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் போர் வெடித்தபோது இஸ்ரேலிடம் இருந்து தான் ட்ரோன்களை பெற்றது. பாகிஸ்தானை தாக்கியதாக இஸ்ரேல் வெளிப்படையாக தனது ஆதரவை அளித்தது. அதனால் இஸ்ரேலை கைவிட முடியாது.
ஈரானை எடுத்துக்கொண்டால் ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவும் உள்ள நிலையில் நட்புறவுடன் இருந்து வருகிறது. ஈரானுடன் ஏற்றுமதி ( அரிசி, தேயிலை, சர்க்கரை,நகைகள்,etc) மற்றும் இறக்குமதியின் (பெட்ரோல், டீசல், கண்ணாடி பொருட்கள்,etc ) மூலம் நல்ல நெருக்கமுடன் இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு இரு நாடுகளும் மோதிக்கொள்ளாமல் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.