ஜூன் 13 சிறகடிக்க ஆசை எபிசோட்!! அப்படியே ட்விஸ்ட் ஆயிடுச்சே!!

ரோகிணி, மனோஜிடம் விஜயாவின் மனதை மாற்றுவதற்காக சாமியாரை சந்தித்து பேசுகிறேன் என்று கூறுகிறார். அதற்கு மனதும் சரி என்று சொல்ல இருவரும் சில நாட்கள் கழித்து மனம் விட்டு பேசி சிரித்து கொள்கின்றனர். அடுத்ததாக ரவி ரூமில் இருக்கும் போது ஸ்ருதி புது ஹோட்டலுக்கு பெயர் வைப்பதை குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் சண்டை மீண்டும் எழுகின்றது. ஒரு வேகத்தில் ரவி குழந்தையை பற்றி பேச, நான் குழந்தையை தத்தெடுத்து கொள்ள போகிறேன் என்று ஸ்ருதி சொல்லுகிறாள். அதைக் கேட்டு ஹேப்பி என்று ரவி சொல்ல, எனக்கு இந்த பேரு ரெஸ்டாரண்டுக்கு ஓகே என்று சந்தோஷமடைகிறாள் ஸ்ருதி.

பின் முத்து குடித்து விட்டு வீட்டுக்கு வர, மீனா இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துட்டீங்களா என்று கோபப்படுகிறார். முத்து சிறிய விவாதத்துக்கு பின், நான் தான் அந்த திருடனை பிடித்தேன். அதை அவன் பிடித்தான் என்று கூறிவிட்டான் என்று புலம்புகிறார். நீங்க பண்ணத ஏன் அவரை மறைச்சாரு சரி இத நாளைக்கு நான் பேசுகிறேன் என்று மீனா கூறிவிட்டு படுக்க வைக்கிறார். சீதா ஒருபுறம் கால் செய்ய, இருவரும் பேசுவதற்கும் நிறையாக வித்தியாசம் உள்ளது. நாளைக்கு நான் நேரில் வந்து பேசிகிறேன் என்று போனை வைத்து விடுகிறார். அடுத்த நாள் அந்த காப்பாற்றப்பட்ட பெண் முத்துவின் வீட்டிற்கு முத்துவை தேடி வருகிறார். அங்கு விஜயா அமர்ந்திருப்பதை பார்த்து விஜயாவிடம் உங்கள் மகனை பார்க்க வந்துள்ளோம். அவரால தான் நான் இன்னைக்கு உயிரோட இருக்கிறேன் என்று கூறி அவரை வர சொல்லுங்க நான் மரியாதை செய்யணும் என்கிறார். விஜயா உடனே மனோஜ் அழைக்க இவர் இல்லை என்று மறுத்து விடுகிறார். அடுத்ததாக ரவி எனக்கு அவரும் இல்லை உங்கள் மகன் முத்துவை பார்க்க வந்துள்ளேன் என்று கூறுகிறார்.

ஒரு நிமிஷம் இருங்க. அவர் என் புருஷன்தான் இப்ப வந்துருவாரு என்று மீனா மகிழ்ந்த வண்ணம் கூறுகிறார். அண்ணாமலை முத்து உன் பிள்ளை இல்லையா. அவனை நீ கூப்பிட மாட்டியா என்று விஜயாவிடம் சண்டை போடுகிறார். முத்து அந்நேரம் பார்த்து வீட்டுக்குள் வர, அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்கிறார். நீங்க நல்லபடியா ஒரு பிள்ளையை பெத்து எடுத்திருக்கீங்க என்று விஜயாவின் வயிற்றை தொட்டு கும்பிடப் போகிறார். விஜயா என்ன செய்வது என்று அறியாமல் முத்துவை பார்க்கிறார். பிறகுதான் வந்தவர்கள் விஷயத்தை எடுத்துக் கூற அதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் அப்லோட் செய்கிறார் ஸ்ருதி. அதை கண்ட போலீசார் அருணிற்கு போன் செய்து நீ தான் பிடித்தேன் என்று சொன்ன! இப்போ அந்த சம்பந்தப்பட்ட பெண் வேறு ஒருத்தவர் வீட்டில் சென்று மரியாதை செய்துள்ளார். போலீசாருக்கு உதவி செய்பவர்களை நாம் தானே முதல் மரியாதை செய்யணும் என்று மேல் அதிகாரிகள் அருணை திட்டுகின்றனர்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram