நாளை நான்காம் கட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இன்று காலையில் பரந்தூர் தவெக அலுவலகத்திற்கு வந்துள்ளார் தலைவர் விஜய். அவரை நேரில் சந்தித்த அங்குள்ள விவசாயிகள் விமான நிலையத்திற்கு எதிராக மனு வழங்கியுள்ளனர். அலுவலகத்தில் வந்த விவசாயிகளை இன்புற வரவேற்று அவர்களின் மனுவை பெற்று, பரந்தூர் விமான நிலைய போராட்டத்திற்கு உறுதுணையாக தவெக நிற்கும் என்று வாக்குறுதி அளித்து உள்ளார்.
அடுத்த கட்டமாக, ஜாக்டோ ஜியோ என்கின்ற குழு ஒன்று இணைந்து திமுகவுக்கு எதிராக துணை நிற்குமாறு ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. இவர் ஜனநாயக படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியல் ஈடுபட்டு வருகின்றார். நேற்று நடந்த கூட்டத்தில் குஜராத் அகமதாபாத் விமான கோர விபத்துக்கு மௌன அஞ்சலி செலுத்தி விட்டு கூட்டத்தை வழி நடத்திச் சென்று உள்ளார். அதன் பின் தன்னை காமராஜர் என்றும் இளைய காமராஜர் என்றும் யாரும் அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு இருந்தார். இந்தக் கூட்டம் வெற்றி பெற்ற மாணவர்களை பற்றி எடுத்து ரைப்பது. இதில் ஆசிரியர்களை பற்றி, மாணவர்களின் திறமையை பற்றி பேசவும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.





