சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளுக்கும், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஒரு சில இடங்களிலும் கனமான மழை பெய்யும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,
நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும் ஒரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய 40 முதல் 50 வரை கிலோமீட்டர் வேகத்தில் மழை வீச கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி ,தேனி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்கள் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
16/6/2025 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும். மேலும், பலத்த காற்றுடன் கூடிய மழையானது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப் பகுதிகள் மற்றும் தேனி, நீலகிரி, தென்காசி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமான முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளது. சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.