விமான விபத்திற்கு அறிவிக்கப்படுமா இன்சூரன்ஸ்!! கிளைம் குறித்த தகவல்!!

அகமதாபாத்தில் மருத்துவ விடுதியில் நிகழ்ந்த விமான விபத்து உலக அளவில் பெரும் மனத் துக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதற்கு இன்சூரன்ஸ் கிளைம் கிடைக்கும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது உலக அளவில் மிகப்பெரிய இழப்பீட்டுத் தொகையாகவும் அமையும் என்று கூறப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்று இருந்த மாண்ட்ரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்துள்ளது. இதன் மூலம் விமானம் மற்றும் விமானம் சார்ந்த விபத்துக்களுக்கு அந்நிறுவனம் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.

இதன் இழப்பீட்டுத் தொகையை உள்நாட்டு மற்றும் அகில உலக சர்வதேச காப்பீட்டு சந்தைகள் ஏற்றுக்கொள்ளும். இருப்பினும் இது விமானம் என்பதால் அதிகமான இழப்பீடு வழங்க நேரிடுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இறந்து போன 241 நபர்களுக்கும் தலா ஒரு கோடி விதம் காப்பீட்டுத் தொகை, விமான மோதிய மாணவர் விடுதிக்கு காப்பீட்டுத் தொகை, முழுவதுமாக சேதமடைந்த விமானத்தின் நிறுவனத்துக்கு காப்பீட்டுத் தொகை, விமானத்தில் பணி புரிந்தவர்களுக்கான காப்பீட்டு தொகை என இதன் விகிதம் 1500 கோடியையும் தாண்டுகின்றது என்பதால் இதற்கு மேல் விமான காப்பீட்டுத் தொகை தற்போது உள்ளதை விட அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகின்றன.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram