சென்னை: ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய தமிழகத்தின் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை பரப்பியதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 30 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகுதியில் சுற்றுலா பயணிகளை திடீரென தாக்குதல் நடத்தியதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்தியா பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று “ஆபரேஷன் சிந்ததூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பயங்கரவாத முகாம்களை துல்லியமாக அளிக்க திட்டமிட்டது.
இந்த தாக்குதையின் போது ஒன்பது முகாம்கள் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் youtube, x, facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. இந்நிலவரப்படி 8,000 மேற்பட்ட சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானுடன் உளவு தகவலை பகிர்ந்து கொண்டதாக பிரபல youtuber ஜோதி மல்கோத்ரா உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதை எடுத்து என்ஐஏ தமிழகத்தில் சில பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக ராமநாதபுரம், கோவை, தென்காசி போன்ற பகுதிகளில் இருந்தவர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வந்தது தெரிய வந்தது. மத்திய அரசின் உத்தரவுப்படி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் தமிழகத்தை சேர்ந்த 30 பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம், தென்காசி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் என்ஐஏ தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆதரவான தீவிரவாத இயக்கங்களுடன் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று கண்காணித்து வருகின்றனர் இது குறித்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.