நாட்டுப்புற இசை களஞ்சியம் காலமானார்!! சோகத்தில் பொதுமக்கள்!!

சிவகங்கை: தமிழ்நாட்டின் கிராமிய கலையில் உலகில் தனித்துவமான பெயர் எடுத்தவர் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் இன்று (14.06.2025) காலமானார். அவருக்கு வயது 99. காலமான நேரம் இன்று காலை 8 மணி. இவர் பிறந்த கிராமமான கொல்லங்குடியில் நாளை (15.06.2025) மதியம் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. நாட்டுப்புற பாடல்களின் உயிராக விளங்கிய கருப்பாயி அம்மாள், சிறுவயதில் இருந்தே இசையில் ஈடுபட்டார். வானொலிகளில் அவரது குரல் மக்கள் மனதில் பதிந்து விட்டது. இவர் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய “ஆண்பாவம்” திரைப்படத்தின் மூலம் silver screen-ல் அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். அவரது சிறப்புப் பணிக்காக தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் பள்ளிக்கூடத்திற்கு பட்டா கோரி பெற்றதைப் பெருமையாகக் கூறி வந்தார். சமூக நலத்துக்கும் பங்களிப்பு செய்த கருப்பாயி அம்மாள், கிராமிய கலைஞர்களுக்கான முன் மாதிரியாக விளங்கினார். அவரது குடும்பத்தில் சகோதரி மெச்சியம்மாள், சகோதரர்கள் சோலைமலை, சுப்பையா, ஆறுமுகம் ஆகியோர் உள்ளனர். இவரது மறைவு, நாட்டுப்புற இசையின் தந்தையின் பிழைபோலக் கருதப்படுகிறது. பலர் அவரது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram