இன்றைய எபிசோட் இன் தொடக்கத்தில் அருண் தனக்கு பெண் பார்ப்பதாக மீனா விடம் கூற, சீதா ஒரு புறம் அழுகிறார். ரிஜிஸ்டர் மேரேஜ் தாங்க ஒரே வழி. எங்க அம்மாவும், உங்க புருஷனும் புரியிற வரைக்கும் நம்ம இத வெளில சொல்ல வேணாம் என்று சொல்ல, மீனா சீதா தனக்கு அப்பா இல்லாமல் ஃபீல் செய்ததை நினைத்துக் கொண்டு தனக்கு டைம் வேண்டும் என்று கேட்டு விட்டு செல்கிறார். மற்றொருபுறம் சாமியாரை சந்திக்க செல்கின்றனர் விஜயா மற்றும் மனோஜ். சாமியார் நான் தவறான விஷயம் செய்து விட்டேன் உடனே அந்த கயிற்றை கழற்றி கொடு என்று கூற விஜயா படக் என்று கழட்டி கொடுத்து விடுகிறார்.
உடனே சாமியார் விஜயா மூஞ்சியில் விபூதியை எடுத்து அடிக்க, அடுத்து உன் வீட்டு வாசல்ல எமதர்மன் நிக்கிறாரு. உன்னோட மூத்த மருமக தான் உன் உசுர காப்பாத்திட்டு இருக்கு. அவ சந்தோசப்படுற மாதிரி நீ நடந்துக்கோ. அதுவே உன் உயிர் காத்து விடும் என்கிறார். அதுமட்டுமின்றி இரவு தூங்கும் போது சிவப்பு நிற சேலை கட்டிக் கொள் என்று கூறுகிறார். விஜயா சற்று குழப்பத்துடன் வெளியே வருகிறாள். விஜயா இந்த சாமியார் ஏதோ காச வாங்கிட்டு பேசுற மாதிரி சந்தேகமா இருக்கு என்று கூற, மனோஜ் உடனே அம்மா அப்படி எல்லாம் பேசாத அவரு ஏதாவது சாபம் கொடுத்திட போறாரு.
நீ சிவப்பு நேர புடவையை கட்டிட்டு தூங்கு என்று கூறி விடுகிறார். இதை ஒளிந்து நின்று கவனித்த ரோகினி சந்தோஷம் அடைந்து, சாமியாரை சந்தித்து நன்றி கூறிவிட்டு ரூபாயை கொடுக்கிறார். அதை சாமியார் வாங்க மறுத்து விடுகிறார். சரி என்று வெளியே கிளம்பும்போது ரோகிணியை அழைத்து நீ உன் குடும்பத்திற்கு உண்மையாக இரு அதுவே போதும் என்று கூற ரோகிணி முகம் மாறிவிடுகிறது. அருணின் அம்மா கோயிலுக்கு வர மீனாவை சந்திக்கிறார்.
அருணுக்குப் பெண் பார்ப்பதாக சொல்ல மீனா மவுனமாக இருக்கிறாள். இந்த அமைதி தான் அருணையும் சீதாவையும் சேர்த்து வைக்க விடாம பண்ணுது என்று சொல்லிவிட்டு செல்கிறார். அடுத்த நிமிடம் முத்து மீனாவிற்கு எங்கிருக்க என்று கேட்டு நான் பார்க்க வருகிறேன் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.