மாஸ்கோ: நேட்டோ கூட்டணியில் இணைய ரஷ்யா முயன்று வருகிறது. உக்ரைன் மீது 2022 ஆம் ஆண்டில் இருந்த ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அதன்படி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்கிரனுக்கு ஆதரவாக ஆயுதம் மற்றும் பொருளாதாரத்தில் ஆதரவை வழங்கி வருகிறது. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனின் படையை நுழைந்தது.
எல்லைக்கு பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பின் ரஷ்ய இராணுவம் தனது படையை குவிக்க தொடங்கியது. உக்ரைனின் படைகள் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நட்பு நாடான வடகொரியாவின் ஆதரவை நாடியது ரஷ்யா. ரஷ்யாவுக்கு உதவும் வகையில் தனது ராணுவ வீரர்கள சுமார் பதினோராயிரம் வீரர்களை வடகொரியா அனுப்பியதாக தென் கொரியா விமர்சித்துள்ளது.
வடகொரியா ராணுவ ராணுவ வீரர்களை அனுப்பியதை மறுத்தது. பின்னாளில் ஒப்புக்கொண்டது. இங்கிலாந்து உளவுத்துறையின் அறிக்கையின்படி உக்ரைனின் தாக்குதலில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் உயிரிழந்ததாக கூறுகிறது. வடகொரியா ராணுவம் அனுப்பப்பட்ட மொத்தம் 11 ஆயிரம் ராணுவ வீரர்களில் 6000 க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த தாக்குதலில் பலியாகி உள்ளனர். இது குறித்து ரஷ்யா மற்றும் வடகொரியா தரப்பில் எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.