டெல் அவிவ்: கடந்த ஜூன் 13ஆம் தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் ஏற்படுத்தியதில் தலைநகர் டெக்ரான் மற்றும் சுற்றியுள்ள ராணுவ தளங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலின் போது ஈரானின் ராணுவ தளபதிகள் மற்றும் அணு ஆயுத விஞ்ஞானிகள் போன்றோர் கொல்லப்பட்டனர். அது மட்டுமல்லாது ராணுவ தளவாடங்கள் மற்றும் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளும் சேதமடைந்தன.
டெஹ்ரானில் உள்ள எரிவாயு சுத்திகரிப்பு ஆலை எண்ணெய் கிடங்கு ஆகியவற்றை தாக்கியதால் எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடந்த தாக்குதலிருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் 4 வது நாளாக நீடித்தது. ஈரானின் மேற்கு பகுதியில் உள்ள தலைநகர் டெக்ரான் முதல் வான் பகுதி வரை தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
13ஆம் தேதி நடந்த இஸ்ரேல் தாக்குதலில் 224 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் நேற்று பல ட்ரோன்கள், 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் போன்றவற்றை வைத்து பெரும்பான்மையான அடுக்குமாடி கட்டிடங்களை சேதமடைய செய்தது. இந்த தாக்குதலில் எட்டு பேர் பலியாகி உள்ளனர்.
குறிப்பாக டெல்லாவை நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு ஏவுகணை விழுந்து வெடித்தது. தூதரகம் லேசான சேதமடைந்தது. இதுவரை இஸ்ரேல் மீது நடத்திய பதிலடி தாக்குதலில் 24 பேரை கொல்லப்பட்டுள்ளதாகவும் 500க்கும் மேல் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில் இதற்கு முன் நடந்த தாக்குதலை விட வலிமையானதாகவும், துல்லியமானதாகவும் இருந்ததாக ஈரான் தரப்பில் கூறியுள்ளது.
தலைநகர் டெக்ரானின் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மண்ணின் வரலாறு காணாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை தாக்குதல்களை நடத்த உள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.