காந்தாரா 2 படப்பிடிப்பில் மற்றொரு விபத்தா!! அதிர்ச்சியில் உறைந்துள்ள படக்குழு!!

கடந்த 2022-ல் வெளியான திரைப்படம் காந்தரா. இந்த படம் உடுப்பி மலை பகுதி மக்கள் வணங்கும் தெய்வமான பஞ்சுருளி என்கிற சாமியை மையமாக வைத்துள்ளது. இது தென்னிந்திய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பு அடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து படக்குழு இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க ஆரம்பித்து இருந்தனர். கடந்த மாதம் இந்த படக்குழுவின் நகைச்சுவை நடிகர் ராஜேஷ் புஜாரி, அவரது நண்பரின் திருமணத்தில் நடனம் ஆடும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருந்தார். அதே மாதம் இப்பட தொழில்நுட்பக் கலைஞர் கபில் கேரளாவில் சவூர்ணிகா என்ற நதியில் குளிக்கும் போது உயிரிழந்து விட்டார். அதன் பிறகு படப்பிடிப்பிற்கு வந்திருந்த விஜு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மேலும், படக்குழு இணைந்த செட்டு ஒன்று உடைந்து விழுந்தது. படக்குழுவில் உள்ளவர்கள் வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விழுந்து ஆக்சிடென்ட் ஆனது. அதைத்தொடர்ந்து நேற்று படகில் படக்குழு இணைந்து படப்பிடிப்பு நடத்திய போது படகு கவிழ்ந்து உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலர் நீந்தி கரை வந்து ஒதுங்கினர். இந்தப் படத்தின் ஹீரோ நீரில் தத்தளித்து உள்ளார். சிலரை மீட்பு குழு சென்று விரைந்து காப்பாற்றியது. மேலும் பட குழுவின் கேமரா நீரில் மூழ்கி சேதம் ஆகி உள்ளது. இவ்வாறு தொடர்ந்து நடைபெறுவதால் காந்தாரா டு முழுமையாக படம் எடுக்கப்படுமா என்ற சந்தேகமே பலரிடம் எழுந்துள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram