ஆதார் அட்டை மாற்றங்களுக்கு இனி அலையவே தேவையில்லை!! களமிறங்க உள்ளது புதிய அப்டேஷன்!!

ஆதார் அட்டையில் இனி மாற்றத்திற்காக மாவட்ட தாலுகா ஆபீஸ்க்கு அல்லது இ சேவை மையத்திற்கும் இனி அலைய தேவை இல்லை. மாற்றத்தை மிக எளிமையாக்கும் வகையில் ஆதார் நிறுவன தலைமையகம் புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இதனைப் பற்றிய முழு தகவல்களை ஆதார் தலைமையக அதிகாரி புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கென்று பிரத்தியேகமாக உதாய் (UIDAI) செயலி புதிய அப்டேஷன்களுடன் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இந்த செயலியில் ஆதார் எண்ணான 12 இலக்க எண்ணில் முதல் எட்டு இலக்க எண் x என்று குறிப்பிடப்பட்டு கடைசி நான்கு இலக்க எண்கள் மட்டும் ஷோ செய்யப்படும். இதனால் ஆதார குறிப்பிட்ட தகவல்கள் மிக பாதுகாப்பாகவும் ஹேக் செய்ய முடியாத அளவும் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. இதன் மூலம் மொபைல் எண், வீட்டு முகவரி, க்யூ ஆர் கோடு மூலம் ஆதாரை சரி பார்ப்பது ஆகியவை எளிமையாக இதன் மூலம் செய்து கொள்ளலாம். ஏதேனும் தனிநபருடைய அடிப்படை மாற்றங்களை மாற்ற வேண்டும் என்றால் இந்த ஆப்பை போதுமானதாக இருக்கும்படி வடிவமைக்க உள்ளனர். கண்விழி படலம் அல்லது கைரேகை ஆகியவற்றை மாற்றுவதற்கு மட்டுமே ஆதார் நிறுவனத்தை தொடர்பு கொண்டால் போதுமானது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரயில்வே டிக்கெட் சரி பார்த்தல், தங்கும் விடுதியில் ஆதார் எண்ணை ஒப்படைப்பது ஆகியவை இந்த ஆப் மூலமே செய்து கொள்ளலாம். இதற்கென்று நகலை கையில் வைத்துக்கொள்ள தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோசடிகளும் குறைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram